Thursday, February 3, 2011

யாத்திரையின் முடிவில்

யாசிக்க முடியாத காதலை
சுவாசித்துக்கொண்டிருப்பவன்
நான்..
இன்னும்
யோசித்துக்கொண்டிருக்கிறாய்
நீ..

தவிர்க்க முடியாத
சந்திப்பில்
தலை திருப்பிக்கொண்டாலும்
நினைப்பில் நானிருப்பேன்
மறுக்கமுடியுமா?

நீ..
என் பாதைக்கு திரும்பும்
காலம்
நான்..?

யாத்திரையின் முடிவில்
அன்பின் துயரம்..