ஒரு குடையின் கீழ்
நாம் இருவரும்
குடை மறைத்த பாதியும்
மழை நனைத்த மீதியுமாய்
நனைய..
நனைய...
ஈரமான மனதை
இறுக்கிப் பிழிந்தது
நம் காதல்..
மழை முடிந்து
குடை சுருக்கியபின்னும்
விடை பெற்று
வீடு வந்த பின்னும்
வெளியில் விட்ட மழை
மனதில்
பெய்துகொண்டே இருக்கிறது..
ஷவரில் குளிக்கிறேன்
எனக்கு மட்டுமான
செயற்கை மழை ..
என்னோடு நீயும் கற்பனைக்
குளியல்..
உன் வீட்டிலும்
அப்படித்தானா?...