Tuesday, August 10, 2010

மௌன அஞ்சலி ..............................

என் மரணத்திற்கு அவள்
மௌன அஞ்சலி செலுத்தினாள்............
அவளுக்கு தெரியவில்லை ..........
என் மரணத்திற்கு அவள் ..
மௌனம் தான் காரணமென்று ......................

Friday, August 6, 2010

நான் இழந்த நட்பு .................

எனக்கு முன் உருவாகி

எனக்கு முன் உதிர்ந்ததேன் ..

ரோமங்கள் சிலிர்க்கின்றன

இதயங்கள் மௌனமாய் அழுகின்றன

கண்ணீரில் வார்தைகள் கரைந்து போகின்றன ...

நிகழ்காலம் எதிகாலம் இரண்டையும் இறந்தகாலம் ஆக்கிவிட்டு

நிறைந்த நித்திரையில் நீ ........

மீளா துயரில் நான் .............

உன்னோடு சண்டையிட்ட காலத்தயும்

சமாதனமான நேரத்தையும்

அன்பு கொண்ட பொழுதுகளும்

வம்பு வளர்த்த இரவுகளும் ....

தொண்டை வரை வந்து தொந்தரவு செயுதுடா ............

மலராய் மலர்ந்த உன் புன்னகைக்கு .........

மலர்களால் அஞ்சலி ...................

கவிதையாய் ஜொலித்த நம் நட்புக்கு ..........

கண்ணீரால் அஞ்சலி ...........................

Wednesday, July 14, 2010

மழையும்.. காதலும்..



















ஒரு குடையின் கீழ்
நாம் இருவரும்
குடை மறைத்த பாதியும்
மழை நனைத்த மீதியுமாய்
நனைய..
நனைய...
ஈரமான மனதை
இறுக்கிப் பிழிந்தது
நம் காதல்..

மழை முடிந்து
குடை சுருக்கியபின்னும்
விடை பெற்று
வீடு வந்த பின்னும்
வெளியில் விட்ட மழை
மனதில்
பெய்துகொண்டே இருக்கிறது..

ஷவரில் குளிக்கிறேன்
எனக்கு மட்டுமான
செயற்கை மழை ..


என்னோடு நீயும் கற்பனைக்
குளியல்..


உன் வீட்டிலும்
அப்படித்தானா?...

Sunday, July 11, 2010

ஒரு அறிமுகம்..

மதிப்பிற்குரிய வலையுலக நண்பரகளே..

இன்றுமுதல் நானும் உங்களில் ஒருவனாகிறேன்.. இதுவரைக்கும் உங்கள் படைப்புகள் அனைத்தையும் தவறாமல் படித்து வந்திருக்கிறேன்..

ஒருநாள் நாமும் நம் எண்ணங்களை எழுதினால் என்ன? எனத் தோன்றியது..

களத்தில் நானும் இறங்கிவிட்டேன்.. நிறைகுறைகளை அவசியம் சுட்டிக்காட்டி என்னை மேம்படுத்திக் கொள்ள உதவ வேண்டும்..

அன்புடன்..
ரமேஷ் வீரா..